அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!
ரேஷன் அட்டைதாரர்கள் அதனை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஜூன் 30ம் தேதி காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இணைக்கபடவில்லை என்றால் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ரேஷன் – ஆதார் இணைப்பு:
இந்தியாவில் அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த வருடம் நிலவிய கொரோனா பேரிடர் காலத்தில் திமுக தலைமையிலான அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் பயன் பெற்றனர். அதனை தொடர்ந்து வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.
சென்னையில் கிடுகிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!
இந்த திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களில் இருந்து பணிபுரிவோர் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலேயே பொருட்களை பெறலாம். அதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும். ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் பொருட்களை பெறலாம். ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க அரசு கால அவகாசமும் வழங்கியது. தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டை ஆதாரை இணைக்கும் முறைகள்:
- முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ஸ்டார்ட் நவ் என்பதை கிளிக் செய்து உங்கள் முகவரி மற்றும் மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
Exams Daily Mobile App Download
- ரேஷன் கார்டு ‘BENIFIT’ ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிடவும்.
- பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP SEND செய்து அந்த என்னை பதிவிட வேண்டும்.
- இந்த செயல்முறை முடிந்ததும், உங்கள் ஆதார் சரிபார்க்கப்படும். மேலும் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கப்படும்.