ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆதாருடன் இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்!
அரசின் அனைத்து நல திட்டங்களையும் பெற ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். இதனை இணைக்க ஏற்கனவே மார்ச் 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 30 ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை:
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாட தேவைக்கான பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டுகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களை பெறுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அரசு சார்பில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல தரப்புடைய ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு – இன்று முதல் தொடக்கம்!
அனைத்து ரேஷன் பொருட்களையும் சரியான நேரத்தில் பெற்றுக் கொள்ளவும், அரசின் அடுத்தடுத்த நல திட்டத்தின் கீழ் பலன் பெறவும் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும். இவ்வாறு இணைத்திருந்தால் நாட்டின் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே மார்ச் 31 ஆம் தேதி வரை ரேஷன் கார்டுதாரர்களுக்கு இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது ஜூன் 30 ஆம் தேதி வரை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க uidai.gov.in என்கிற அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று அதில் உள்ள Start Now என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்பு அதில் கேட்கப்பட்டுள்ள முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய அனைத்து விவரங்களையும் சரியாக பதிவிட வேண்டும். பின் ஒரிஜினல் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ் ஆகிய தேவையான ஆவணங்களையும் இணைத்தால் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விடலாம்.