PM – KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – ஜூலை 15 கடைசி நாள்!
PM – KISAN திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் கடந்த மே 31-ஆம் தேதி தான் 11 ஆவது தவணைக்கான நிதியுதவியை பெற்றனர். மேலும், 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை பெற கட்டாயமாக eKYC செயல்முறையை வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
eKYC செயல்முறை
இந்தியா முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் பிரதமர் கிசான் சம்மன் நிதியுதவி திட்டத்தின் மூலமாக நிதியுதவி வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதாவது இந்த திட்டத்தின் கீழ் இணைந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் ஒரு ஆண்டிற்கு மட்டுமே ரூபாய் 6000 வரைக்கும் மத்திய அரசாங்கத்தால் நிதியுதவி வழங்கப்படுகிறது. தற்போது வரைக்கும் விவசாயிகள் பிரதமர் கிசான் சம்மன் நிதித் திட்டத்தின் மூலமாக 11 ஆவது தவணைக்கான நிதியுதவி பணத்தை பெற்று பயனடைந்துள்ளனர்.
மீண்டும் வேகமெடுத்த கொரோனா பரவல் – ஊரடங்கு அமல்! காரணம் இது தான்!
பிரதமரின் இந்த pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை கடந்த மே 31-ஆம் தேதி தான் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது. பலருக்கும் இந்த 11 ஆவது தவணைக்கான பணம் வந்து சேரவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்திற்கான அனைத்து பணத்தையும் பெற விரும்புபவர்கள் கண்டிப்பாக eKYC செயல்முறையை அப்டேட் செய்திருக்கவேண்டும். அவ்வப்போது விவசாயிகளுக்கு eKYC செயல்முறையை அப்டேட் செய்வதற்காக காலக்கெடு வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அடுத்ததாக 12வது தவணைக்கான பணத்தை பெற விரும்பும் விவசாயிகள் கட்டாயமாக eKYC செயல்முறைக்கான அப்டேட்டை வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் செய்து விடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், PM கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நிதியுதவியை பெறும் பட்டியலில் தங்களது பெயர் இருக்கின்றதா என்பதை https://pmkisan.gov.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று உங்களது மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். பின்பு,PM kisan திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெரும் விவசாயிகளின் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம்.