TNPSC மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 30 கடைசி நாள்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டி தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு மே 21ம் தேதி அன்றும் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்த உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – கூட்டுறவுத்துறை அமைச்சர் உரை!
இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் உள்ளிட்ட பிரிவில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் இதற்கு விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். அத்துடன் சிறப்பு பிரிவினராக இருப்பின் 60 வயது வரை இருக்கலாம். இந்த தேர்வு ஜூன் 19 ஆம் தேதி அன்று காலை மற்றும் பிற்பகலில் கணினி வழியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் சென்னை, மதுரை , கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் மட்டுமே கணினி வழியில் TNPSC தேர்வாணையம் நடத்தியுள்ளது. தற்போது முதன்முதலில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வு கணினி வழியில் நடைபெற உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 30ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைய உள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
பணியின் பெயர் : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி
வயது வரம்பு : 32 வயது சிறப்பு பிரிவினர் எனில் 60 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம் : ரூ. 56,100 முதல் 2.05 லட்சம் வரை
எழுத்து தேர்வு : ஜூன் 19 ஆம் தேதி காலை
கணினி வழித் தேர்வு : ஜூன் 19 ஆம் தேதி பிற்பகல்
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஏப்ரல் 30ம் தேதி