TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – நாளை கடைசி நாள்!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 14 முதல் தொடங்கிய விண்ணப்பதிவு நாளையுடன் முடிவடையவுள்ளது. இன்னும் விண்ணப்பிக்காத தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 5831 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள குரூப் 2,2A தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிக தேர்வர்கள் எதிர்பார்க்க கூடிய குரூப்4&VAO தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகளை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள் – அரசு முக்கிய அறிவிப்பு!
கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால் ஆசிரியர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதாகவும், கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டது.
அதன் படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியது. அதனை தொடர்ந்து மார்ச் 14 முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவுகளும் தொடங்கியது.நாளை ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில் விரைந்து தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.500 , எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்று திறனாளர்களுக்கு ரூ.250 ஆகும்.