தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – மே 17 கடைசி நாள்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை - மே 17 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை - மே 17 கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – மே 17 கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறையில் உள்ள காப்பீடு முகவர் பணியில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய ஆசையா? உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

மேலும் இவர் கூறியதாவது, இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 50 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கு 10ம் வகுப்பு அல்லது நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வேலைவாய்ப்பற்ற, முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், சுயதொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், ஆயுள் காப்பீட்டு முகவர்கள், சுய உதவிக்குழுவினர், கிராம சபை தலைவர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ExamsDaily Mobile App Download

இதில் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். அத்துடன் தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ.5 ஆயிரம் காப்பீட்டு தொகையாக, தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். மேலும் பணியில் நியமிக்கப்படுவோருக்கு பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையானது அவர்களின் ஏஜென்சி காலம் முடியும் போது திருப்பி வட்டியுடன் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சென்று படிவத்தை பெற்று கொள்ளலாம். மேலும் இதற்கு வருகிற மே 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!