தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற விரும்புவோர் கவனத்திற்கு – மே 12 கடைசி நாள்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற விரும்புவோர் கவனத்திற்கு - மே 12 கடைசி நாள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற விரும்புவோர் கவனத்திற்கு - மே 12 கடைசி நாள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற விரும்புவோர் கவனத்திற்கு – மே 12 கடைசி நாள்!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தவறு இருப்பின் வருகிற 12ம் தேதிக்குள் மேல் முறையீடு செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் இதில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் இந்த முறைகேடுகளுக்கு வங்கி அதிகாரி உட்பட இதற்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தள்ளுபடிக்கு பெற தகுதியான நபர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வலுவடைந்த “அசானி” புயல்!

அதன்படி தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்த 48 லட்ச விண்ணப்பதாரர்களின் விவரங்கள் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நிபந்தனைக்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தற்போது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் தங்களுக்கு தகுதி இருந்தும் நகைக்கடன் தள்ளுபடி பெயர் பட்டியலில் குறிப்பிடப்படவில்லையெனில் அவர்கள் மேல் முறையீடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பட்டியல் வெளியான நாளில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இந்த பட்டியல் கடந்த 12ம் தேதி அன்று பட்டியல் வெளியானது. அதன்படி வருகிற 12ம் தேதிக்குள் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர், நாமக்கல், திருச்செங்கோடு சரக துணைப்பதிவாளரிடம், எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரத்துடன் மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!