தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிப்.5 கடைசி நாள்!
இந்தியாவில் தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வுக்கு வரும் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
திறன் தேர்வு:
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறும்பான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் ஆகிய மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கல்வி உதவித்தொகை திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த உதவித்தொகை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது. அதன்படி தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும்.கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
பிப்.10 வரை தினசரி 7 மணி நேரம் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. 8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12ம் வகுப்பு முடியும் வரை அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் 8ம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
TNUSRB காவலர் தேர்வில் இனி தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
இத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. தகுதியுள்ள மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேவையான விவரங்களை அறிந்து 05.02.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் 6995 மாணவ மாணவிகள் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.