தமிழக தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை – மே 25 கடைசி நாள்!

0
தமிழக தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை - மே 25 கடைசி நாள்!
தமிழக தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை - மே 25 கடைசி நாள்!
தமிழக தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை – மே 25 கடைசி நாள்!

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் தற்போது மே 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கும் நோக்கில் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் நலிவடைந்த பிரிவை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும். ஆண்டுதோறும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒருவருக்கு புதுவகை கொரோனா உறுதி – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!

அதன்படி 2022- 2023 ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு கடந்த மாதம் தொடங்கியது. இந்த RTE மாணவர் சேர்க்கைக்கு சில நிபந்தனைகளும் உண்டு எல்.கே.ஜி அல்லது 1 ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்க வீட்டு முகவரியில் இருந்து பள்ளிக்கு அருகாமையில் அதாவது 1 கி.மீ இருக்க வேண்டும். மேலும் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர் என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசம் மே 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், RTE மாணவர் சேர்க்கையின் கீழ் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி வரை 2,476 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது, பிறப்புச் சான்று, இருப்பிடச் சான்று, மருத்துவமனை பதிவேடு, அங்கன்வாடி பதிவேடு நகல், குழந்தை மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் அவசியமாகும். இந்த சான்றிதழ்கள் அனைத்தும் வட்டாட்சியரிடம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எல்.கே.ஜி அல்லது 1ஆம் வகுப்பு சோ்க்கைக்கு குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது நீடிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!