மத்திய அரசின் PM KISAN திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மே 31ம் தேதி கடைசி நாள்!
மத்திய அரசு விவசாயிகளுக்கென்று பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.2000 வழங்கப்படுகிறது. அதன்படி இதில் ஆண்டுக்கு 4 மாதங்களுக்கு ரூ.2000 வீதம் என மொத்தமாக ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இதில் தற்போது 11 தவணையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பிஎம் கிசான் திட்டம்
இந்தியாவில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை என ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை பல கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மே 16ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை? RBI அறிவிப்பின் முழு விபரங்கள் இதோ!
இந்த திட்டத்தில் 11 தவணை பெற விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 11வது தவணையை பெற விவசாயிகள் தங்களின் eKYC செயல்முறையை சரிபார்க்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனை மேற்கொள்ளாதவர்களுக்கு தவணை தொகை வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசத்தை மே 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் eKYC செயல்முறையை சரி செய்ய முடியாதவர்களுக்கும் 11வது தவணை தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் 11வது தவணையை பெற வருகிற மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் தற்போது வரை 1352 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் இத்திட்டத்தில் உள்ள பயனாளிகளின் வங்கி கணக்குடன் ஆதார் எண், அலைபேசி எண் உள்ளிட்டவை பரிசீலினை செய்து பணம் வரவு வைக்கப்படும். இதனை வருகிற மே 31ம் தேதிக்குள் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பயன்பெறலாம்.