IPPB GDS இந்தியா போஸ்டில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி பதவிகளுக்கான இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தற்போது இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகளை பற்றி பார்ப்போம்.
வேலைவாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள அதிகாரி பதவியில் 650 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியும் மற்றும் திறமையும் உள்ளவர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும் இத்தேர்வுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பதார்கள் 30 ஏப்ரல் 2022 அன்றைய நிலவரப்படி 25 முதல் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – 34 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
அத்துடன் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இந்திய அரசு அல்லது அரசு ஒழுங்குமுறை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 30,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://ippbonline.com/ என்ற IPPB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக வருகிற மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 வரை செலுத்த வேண்டும். மேலும் இத்தேர்வுக்குரிய அட்மிட் கார்டு விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 7 அல்லது 10 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் இதற்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதலான தகவல் வேண்டுமென்றால்
https://www.ippbonline.com/