அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – செப்.30ம் தேதி கடைசி நாள்!
தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு அறநிலையத்துறையில் தேவையற்ற பணியிடங்கள் – ஆய்வுக் குழு அமைப்பு!
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு நிபந்தனைகளின் கீழ் அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி பிற படிப்புகள் பயிலும் மாணவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் தங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திலேயே பெற்று நவம்பர் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது வங்கி கணக்கு எண்ணை விண்ணப்பத்தில் தவறாது குறிப்பிட்ட வேண்டும்.
திருப்பூர், பல்லடத்தில் 14 மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
ஏற்கனவே கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்கள் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நீங்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே சமர்பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.