GATE 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – ஐஐடி காரக்பூர் அறிவிப்பு!
பொறியியல் மேற்படிப்புகளுக்காக கேட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கேட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று ஐஐடி காரக்பூர் அறிவித்துள்ளது.
கேட் நுழைவுத்தேர்வு:
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர்வதற்கு கேட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் கேட் தேர்வை நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் நடத்தவுள்ளது.
TNPSC போட்டித் தேர்வுகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு – தேர்வர்கள் குழப்பம்!
தற்போது 2022 – 2023ம் கல்வி ஆண்டிற்கான நுழைவு தேர்வானது பிப்ரவரி மாதம் 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வானது 100 மதிப்பெண்களை உள்ளடக்கியது. சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப்பிரிவுகளுக்கு கேட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 29 பாடப் பிரிவுகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய ரேஷன் கார்டுக்கு நிமிடத்தில் விண்ணப்பிக்கும் முறை – எளிய வழிமுறைகள் இதோ!
பிடிஎஸ் மற்றும் எம் ஃபார்ம் படிப்பு முடித்தவர்களும் கேட் தேர்வு எழுதலாம் என கூறப்பட்டுள்ளது. கேட் தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.