தமிழகத்தில் கொரோனா பாதித்து இறந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு – மே 18 கடைசி நாள்!
தமிழகத்தில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் தங்களது நெருக்கமானவர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் மரணம் அடைந்த குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த இழப்பீடு பெற மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இழப்பீடு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. கொரோனாவில் இருந்து தப்பிக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதனால் ஏகப்பட்ட பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகளையில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். பலருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டது. பல குடும்பங்கள் தங்களுக்கு நெருக்கமான சொந்தங்களை இழந்து இருக்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 18 (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
இதனால் பல குடும்பங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவர்களை இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அந்த குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இது குறித்து தமிழக அரசு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் படி கொரோனா இழப்பீடு தொகை பெற மே 18 ஆம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 20.03.2022–க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.