TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? வாட்டி வதைக்கும் இணையதளம்!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மட்டுமே கடைசி தேதி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கடந்த 3 நாட்களாக ஆமை வேகத்தில் சம்பந்தப்பட்ட இணையதளம் இயங்குவதால் விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் தவித்து வருகின்றனர்.
TN TRB:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விடக் கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டது.இந்த நிலையில் சென்ற வருடம் பொது தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது.
TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு! தவறாமல் படிங்க!
அதனை தொடர்ந்து தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். இது பிளஸ் 2 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்றுடன்(ஏப்ரல் 13) இந்த தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடையும் நிலையில், கடந்த 3 நாட்களாக விண்ணப்பிக்கும் இணையதளம் மிகவும் குறைவான வேகத்தில் இயங்குவதால் விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இதனால் விண்ணப்பத்தார்கள் வாரியத்துக்கு தொடர்பு கொண்டால் முன்பே விண்ணப்பித்திருக்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளனர். ஆனால் விண்ணப்பிக்க இன்று மட்டுமே உள்ள நிலையில் பட்டதாரிகள் சார்பில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் தற்போது பி எட் படித்த 50 ஆயிரம் பேருக்கு தேர்வு முடிவுகள் வர வேண்டியுள்ளது. அதனால் விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்தால் அவர்களும் அதற்கு விண்ணப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.