நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (10.08.2021) கடைசி தேதியாகும். மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மத்திய அரசால் தேசிய அளவில் நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த வருடம் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு காலதாமதமாக நடைபெறவுள்ளது. இந்த பேரிடர் காலத்திலும் நீட் தேர்வுக்கான பயிற்சி ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. மேலும் நீட் தேர்வு வினாத்தாளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 180 கேள்விகள் இந்த ஆண்டு முதல் 200 கேள்விகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
இந்த ஆண்டு நீட் தேர்விற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 13 முதல் தொடங்கியது. https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு முதல் முறையாக மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் தேர்வு மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் நர்சிங் படிப்பில் சேர விரும்ப ஆர்வமுள்ள மாணவர்களை கருத்துக் கொண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதன்படி மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (10.08.2021) கடைசி தேதியாகும். ஆகஸ்ட் 14ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.