தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,908 பேருக்கு கொரோனா உறுதி – 22 மாவட்டங்களில் புதிய பலி இல்லை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா தொற்று பாதிப்பு குறித்த முழு விவரங்களையும் அரசு சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்புகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நோய் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் நோய் தொற்று முன்னதாக குறைந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்புகள் நிலவரத்தை அறிக்கையாக வெளியிடுகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேலும் 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு – மீறினால் விநோத தண்டனை!
இதனால் மாநிலத்தில் தொற்று பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 25,65,452 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும், 29 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை 34,159 பேர் பலியாகியுள்ளனர். இன்று மட்டும் 2,047 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 25,11,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 20,217 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 538727 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 1,45,585 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 281 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.