தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு லேப்டாப் – அரசின் அசத்தலான திட்டம்… முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு லேப்டாப் - அரசின் அசத்தலான திட்டம்... முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு லேப்டாப் - அரசின் அசத்தலான திட்டம்... முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு லேப்டாப் – அரசின் அசத்தலான திட்டம்… முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களின் நலனிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மடிக்கணினி:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பள்ளிக்கல்வித்துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் நோக்கில் கடந்த 2 வருடங்களில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விளைவாக தற்போது தரமான கல்வியை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் 2ம் இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் ஆதார் மின் இணைப்பு விவகாரம் – 1.5 லட்சம் பயனர்கள் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்! காரணம் இது தான்!

மாணவர்களை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களின் நலனிலும் கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் பணிபுரிய கூடிய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதுமட்டுல்ல ஆசிரியர்களின் உடல் நலத்தை பேணி காக்கும் வகையில் அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். மாணவர்களுக்கான அரசின் திட்டங்களை சிறப்பான முறையில் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இத்தகைய ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லபடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!