பள்ளிகள் ஜூலை மாதம் முதல் மீண்டும் திறப்பு – லான்செட் நிறுவனம் ஆய்வு!!

0
பள்ளிகள் ஜூலை மாதம் முதல் மீண்டும் திறப்பு - லான்செட் நிறுவனம் ஆய்வு!!
பள்ளிகள் ஜூலை மாதம் முதல் மீண்டும் திறப்பு - லான்செட் நிறுவனம் ஆய்வு!!
பள்ளிகள்  ஜூலை மாதம் முதல் மீண்டும் திறப்பு – லான்செட் நிறுவனம் ஆய்வு!!

கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை மாதம் முதல் மீண்டும் பள்ளிகளை திறப்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாக லான்செட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு அறிக்கை:

இந்தியாவில் உள்ள கொரோனா தொற்றின் தாக்கத்தை மையமாக வைத்து லான்செட் கோவிட் கமிஷன் டார்க் ஃபோர்ஸ் நிறுவனம் “இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை” என்ற தலைப்பின் கீழ் ஆய்வு ஒன்றை சமீபத்தில் நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆய்வின் படி, இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு வரவேற்பை பெறவில்லை. 2021 ஜூலை மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அதற்காக வரும் மே மற்றும் ஜூன் மாதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு – பல்கலை துணைவேந்தர் அறிவிப்பு!!

வல்லுனர்களின் கருத்து:

கொரோனா இரண்டாவது அலை நாட்டில் இன்னும் 2 முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கும். கடந்த ஆண்டு இது தொடர்பான முன்னேற்பாடு இல்லாமல் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டோம். அதனால் நடப்பு ஆண்டு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக கூடுதலாக ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர்கள் போன்றவை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கோவிட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் தொற்றுநோயியல் துறையின் கூடுதல் பேராசிரியருமான டாக்டர் பிரதீப் பனந்தூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

பரிந்துரைகள்:

வல்லுநர்கள் குழு மேலும் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது. மற்ற நாடுகளிலிருந்து வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் கட்டாயமாக ஏழு நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். மேலும், 8 ஆம் நாளில் ஒரு ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டும். சோதனை எதிர்மறையாக இருந்தால், அவர்களின் வீட்டை ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகமூடிகள், சோதனை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விருப்பங்கள் மற்றும் மாவட்டத்தின் புறநகரில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களையும் மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!