SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – KYC மோசடி எச்சரிக்கை!
SBI நிறுவனத்தின் பிரதிநிதியை போல் நடித்து வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை மோசடிக்காரர்கள் பெறும் பெறுவதன் மூலம் பல்வேறு மோசடி செயல்கள் நடைபெறுவதாக வங்கி நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
SBI எச்சரிக்கை:
சமீப காலத்தில் KYC மோசடி தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவாகி வருகிறது. இதனால், ஆன்லைன் மோசடி அதிகரிப்பிற்கு எதிராக எஸ்பிஐ வங்கி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால் வங்கி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரித்துள்ளது. எஸ்பிஐ நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமாகும். மோசடி செய்தவர் வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்களைப் பெற வங்கி அல்லது நிறுவனத்தின் பிரதிநிதியாக நடித்து ஒரு SMS ஐ அனுப்புவதாக வங்கி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி – அரசுக்கு கோரிக்கை!
இதுபோன்ற ஆன்லைன் மோசடி வழக்குகள் அனைத்தையும் சைபர் கிரைம் துறையின் https://www.cybercrime.gov.in/ என்ற முகவரியில் தெரிவிக்குமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டது. இந்த துறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை பாதுகாக்கும் முறைகள் குறித்து வங்கி அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
சீனாவை சேர்ந்த மோசடிக்காரர்கள், சமீபத்தில் 50 லட்சம் பரிசு கிடைத்திருப்பதாகவும், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களின் KYC ஐ புதுப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல் 2020ம் ஆண்டு 67 வயதான பெரியவரிடம் சைபர் குற்றவாளிகள் 3 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடிகள் அனைத்தும் KYC புதுப்பிப்பு மூலம் நடத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கை பாதுகாக்கும் முறை:
- KYC ஐப் புதுப்பிக்க வங்கி எப்போதும் லிங்க் அனுப்புவதில்லை. எனவே எந்த லிங்க் ஐயும் கிளிக் செய்வதற்கு முன்னர் நன்கு ஆராய்ந்து கொள்ளுங்கள்.
- உங்கள் வங்கி மொபைல் எண் மற்றும் ரகசிய விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.