இந்திய பயணிகள் விமான போக்குவரத்திற்கு தடை – குவைத் அரசு நடவடிக்கை!!
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு மிக அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணத்தினால் தடுப்பு நடவடிக்கையாக குவைத் அரசு இந்திய விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.
விமான போக்குவரத்து:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3.46 லட்சத்திற்கு அதிகமானவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி இந்தியாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 2500ஐ தாண்டி வருகிறது. இதன் காரணமாக தீவிர கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு இடையேயான விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல் அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விமான போக்குவரத்து சேவைக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் 3 நாட்கள் முழு ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிப்பு!
தற்போது இதனை தொடர்ந்து குவைத் அரசும் இந்தியாவிற்கு இடையேயான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குவைத்திற்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை என்று அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவிற்கு வெளியே 14 நாட்கள் தங்கியிருந்தவர்கள் மட்டுமே தக்க பரிசோதனைக்குழு பின்பு குவைத்திற்குள் அனுமதிக்கப்படுவர். குவைத் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.