தமிழகத்தில் ‘இந்த’ விடுதிகளுக்கெல்லாம் தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
செயற்கை நீர் வீழ்ச்சியுடன் செயல்படும் தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது .
உயர் நீதிமன்றம் தீர்ப்பு :
குற்றாலத்தில் உள்ள சில தனியார் விடுதிகள் வசதியான சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் நோக்கில் இயற்கையாக மலையிலிருந்து விழும் அருவிகளின் பாதையை மாற்றி செயற்கை நீர் வீழ்ச்சியுடன் கூடிய விடுதிகளை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அருவிகளின் பாதை மாற்றப்படுவதால் காலம் காலமாக இருக்கும் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நன்கு ஆராய்ந்த நீதிபதிகள் இயற்கையை பாதிக்கும் வகையில் இது போன்ற செயற்கை நீர்விழ்ச்சிகளை உருவாக்குவது சட்ட விரோதமான செயல் என்று தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் – வாரந்தோறும் புதன் கிழமைகளில் செயல்படும்!!
Exams Daily Mobile App Download
மேலும் தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, நீலகிரி ஆட்சியர்கள் இது போன்ற விடுதிகள் தங்கள் மாவட்டங்களில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். ஒருவேளை இது போன்ற செயற்கை நீர்விழ்ச்சியுடன் சொகுசு விடுதி இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த விடுதியை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையையும் வரும் 1ம் தேதிக்கு ஒத்துவைத்துள்ளனர்.