தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு மார்க்கெட்டில் அனுமதியில்லை – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு தடுப்பூசி போடாதவ வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே மே 24 முதல் ஜூன் 7 வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை உடன் முடிவடைய உள்ள நிலையில், தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 14 வரை நீடிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
SBI வங்கியில் ஜூலை 1 முதல் சேவை கட்டணம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
அதன்படி அனைத்து காய்கறி, பழங்கள், மளிகை கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், வாகன பழுது பார்க்கும் கடைகள் போன்றவை அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற தனியார் நிறுவனங்கள், கடைகள் திறக்க தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் கோயம்பேடு சந்தையில் அடுத்த 10 நாட்களில் தடுப்பூசி போடாத வியாபாரிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வியாபாரம் முடிந்த பின்னர் மார்க்கெட் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.