பிரிட்டனின் ‘கோப்ரா வாரியர் 2022’ விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியாவின் பங்கேற்பு ரத்து – போர் எதிரொலி!

0
பிரிட்டனின் 'கோப்ரா வாரியர் 2022' விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியாவின் பங்கேற்பு ரத்து - போர் எதிரொலி!
பிரிட்டனின் 'கோப்ரா வாரியர் 2022' விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியாவின் பங்கேற்பு ரத்து - போர் எதிரொலி!
பிரிட்டனின் ‘கோப்ரா வாரியர் 2022’ விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியாவின் பங்கேற்பு ரத்து – போர் எதிரொலி!

வரும் மார்ச் மாதம் பிரிட்டனில் வைத்து நடைபெற இருக்கும் ‘கோப்ரா வாரியர் 2022’ என்ற விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரஷ்யா – உக்ரைன் போரின் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விமானப்படை பயிற்சி

தற்போது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரானது, 3வது உலக மகா யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை ரஷ்யாவுக்கு எதிராக தனித்து போராடி வரும் உக்ரைன் அரசுக்கு சில நாடுகள் ராணுவப் படைகளை அனுப்பி ஆதரவு கரம் நீட்டி இருக்கிறது. அதே போல ரஷ்யாவின் நடவடிக்கையை கொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆதரித்து வருகிறது. இது தவிர பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை உயர்வு? முழு விவரம் இதோ!

இப்போது உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர்ப்படைகள் களமிறங்கினால் இந்த போர் உலகளாவியதாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை பிரிட்டனில் நடைபெறும் கோப்ரா வாரியர் 2022 என்ற விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ள இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை கைவிடுவதாக அரசு அறிவித்துள்ளது.

திருப்பதி செல்ல திட்டமிடும் பக்தர்கள் கவனத்திற்கு – விஐபி தரிசனம் ரத்து!

அதாவது ஏற்கனவே திட்டமிட்டபடி, பல்வேறு நாடுகள் பங்கு பெற இருந்த விமானப்படை கூட்டுப் பயிற்சியில், இந்தியாவும் பங்கேற்க இருந்தது. இதற்காக இந்திய விமானப்படையின் 5 எல்சிஏ தேஜாஸ் போர் விமானங்கள் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட இருந்தது. இப்படி இருக்க கடந்த சில நாட்களாக ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் விமானப்பயிற்சியில் இந்தியா பங்கேற்பது ஏதேனும் ஒரு தரப்பிற்கு ஆதரவு அளிப்பது போல இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!