திடீரென வில்லனாக மாறிய “பாக்கியலட்சுமி” கோபி சதீஸ் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ், இனி கோபி எப்படி இருக்க வேண்டும் என ரசிகர்களிடம் கேள்வி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் கடைசியில் கோபி கதாபாத்திரம் போல பேசி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரையில் டாப் 1 இடத்தில் உள்ள சீரியல் ஆகும். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கோபி கதாபாத்திரம் இருக்கிறது. இல்லத்தரசியின் கதை என சீரியல் தலைப்பில் தொடங்கப்பட்டாலும், கதாநாயகன் கோபியை சுற்றியே முக்கிய கதை இருக்கிறது. கோபி தனது மனைவி பாக்கியாவை ஏமாற்ற அப்பாவியாக இருக்கும் பாக்கியாவிற்கு விவரம் எதுவும் தெரியாமல் இருக்கிறது. ராதிகாவிற்கு தெரியாமலும் பாக்கியாவிற்கு தெரியாமலும் கோபி செய்யும் சேட்டைகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
Exams Daily Mobile App Download
கோபியின் வில்லத்தனத்தை பாராட்டும் விதமாக சிறந்த வில்லன் விருது விஜய் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலமாக வழங்கப்பட்டது. கோபி பாக்கியாவிற்கு செய்யும் வில்லத்தனத்தை எதிர்த்து தமிழக மக்கள் பலர் பாக்கியாவின் பக்கம் நிற்கின்றனர். அந்த அளவிற்கு சீரியல் என்பதை மறந்து கோபியின் வில்லத்தனத்தை ரசித்து பார்க்கின்றனர். கொடூரமான வில்லன் என காட்டாமல் அவ்வப்போது நகைச்சுவை கலந்து இருக்கிறது கோபி கதாபாத்திரம்.
கோபியாக நடிகர் சதீஸ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சதீஸ் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி கதாபாத்திரம் தான் அவருக்கு தனி பெருமையை கொடுத்தது. இந்நிலையில் சதீஸ் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் கோபி கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும், நகைச்சுவையாக கொண்டு செல்ல வேண்டுமா, பொறுப்பான மகன் அப்பா போல காட்ட வேண்டுமா அல்லது வில்லத்தனமான காட்ட வேண்டுமா என கொடூரமாக பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.