ராதிகாவிடம் போனில் பேசி கதிரிடம் மாட்டிக்கொள்ளும் கோபி – மகா சங்கமம் ப்ரோமோ ரிலீஸ்!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார்கள். இந்நிலையில், கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயத்தை கதிர் அறிந்து கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோபி ராதிகாவை தான் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயம் பாக்கியாவிற்கு எப்போது தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். எப்படியாவது பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கோபி முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
தற்போது கோபி மீது ராதிகாவிற்கும் சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால், பாக்கியா மட்டும் எவ்வளவு தவறு செய்தாலும் நம்பி கொண்டிருக்கிறது. பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது ராதிகாவிற்கு தெரிந்துவிட்டால் கோபியை விட்டு ராதிகா விலகுவாரா அல்லது கோபியை பாக்கியாவிடம் இருந்து பிரிக்க நினைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த வாரம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மகா சங்கமம் நடைபெற இருக்கிறது. அதாவது ராமமூர்த்தி தாத்தாவிற்கு 75 ஆவது பிறந்தநாளை குடும்பத்தினர்கள் கொண்டாட இருக்கிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, மகிழ்ச்சியில் சித்து – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
இந்த பிறந்த நாள் விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ராதிகாவும் பிறந்தநாளுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என பாக்கியா அழைத்திருக்கிறார். எப்படியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள யாரிடமாவது கோபி மாட்டிக்கொள்ள தான் போகிறார் என எதிர்பார்த்த சமயத்தில் ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்ள போகிற விஷயம் கதிருக்கு தெரிய வருகிறது. கதிர் இருப்பது தெரியாமல் கோபி ராதிகாவிடம் போனில் பேசுகிறார். அப்போது கதிரிடம் கோபி மாட்டிக் கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.