IND VS SA: ரோஹித்துக்கு பதில் ஓப்பனிங்கில் களம் இறங்குவேன் – KL ராகுல் உறுதி!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மோதும் ஒரு நாள் போட்டிகளில் காயம் காரணமாக ரோஹித் இடம்பெறவில்லை. இந்நிலையில் ரோஹித்துக்கு பதில் ஆட்டத்தை தொடங்குவேன் என்று செய்தியாளர்களை சந்தித்த KL ராகுல் தெரிவித்துள்ளார்.
KL ராகுல் பேட்டி:
விராட் கோஹ்லி இந்தியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்திய அணி தொடக்க ஆட்ட வீரரான ரோஹித் சர்மா ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மாவுக்கு ஹாம்ஸ்ட்ரிங் இஞ்சூரி ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் போட்டிகளை KL ராகுல் வழி நடத்தவுள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
எல்லை பாதுகாப்பு படையில் ரூ.69,100 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கும் முழு விபரங்கள் இதோ!
ஒரு நாள் தொடர் குறித்து KL ராகுல் கூறுகையில், நாளை தொடங்கவிருக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் ரோஹித்துக்கு பதில் தொடக்க வீரராக நான் களமிறங்குவேன் என்று தெரிவித்தார். மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லிக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் எனக்கு அணியை நடந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது என்றும் அப்போட்டியில் தோல்வியடைந்தது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது என்றும் கூறினார். அதை தொடர்ந்து நாளை தொடங்கவிருக்கும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக அணியை வழிநடத்தியும் ஒரு நாள் தொடரை கைப்பற்ற முயலுவேன் என்று பேட்டியளித்தார்.
ஆதார் எண் மூலமாக e-PAN CARD பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மேலும் MS தோனி மற்றும் விராட் கோஹ்லி போன்ற சிறந்த கேப்டன்களின் தலைமையில் நான் விளையாடி உள்ளேன். நான் அணிக்கு கேப்டனாக இருக்கும் நிலையில் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதை தக்க சமயத்தில் செயல்படுத்துவேன் என்று கூறினார். நாளை போலந்து மைதானத்தில் தொடங்கவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் KL ராகுலுடன், தவான் அல்லது CSK வீரர் ருத்ராஜ் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.