IPL 2022: கேப்டன் KL ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி! அதிகாரபூர்வ லோகோ ரிலீஸ்

0
IPL 2022: கேப்டன் KL ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி! அதிகாரபூர்வ லோகோ ரிலீஸ்
IPL 2022: கேப்டன் KL ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி! அதிகாரபூர்வ லோகோ ரிலீஸ்
IPL 2022: கேப்டன் KL ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி! அதிகாரபூர்வ லோகோ ரிலீஸ்

2022 ஆம் ஆண்டு IPL தொடரில் புதிதாக இணைக்கப்பட்ட KL ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் லோகோ இன்று வெளியிடப்பட்டது. லக்னோ அணியின் லோகோவை IPL ரசிகர்கள் இணையதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

லோகோ வெளியீடு:

IPL தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. 2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணி முடிவடைந்த நிலையில் புதிதாக விளையாடும் லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக தேர்வாகியுள்ளார். லோகேஷ் ராகுலை லக்னோ அணி 17 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர் ஸ்டோனிஸ் 9.2 கோடிக்கும் ,ரவி பிஷ்னோய் 4 கோடிக்கும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வருகிற 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறும் IPL மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் – வலுக்கும் கோரிக்கை!

சமீபத்தில் RPSG குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான லக்னோ பிரான்சிஸ் அணியின் பெயர் மாற்றப்பட்டு தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்று பெயரிடப்பட்டது. இந்த தகவலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஜனவரி 24 ஆம் தேதியான நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது லக்னோ அணியின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. புராணங்களில் இடம்பெற்ற, சக்தி வாய்ந்த மற்றும் இந்திய கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான கருடனை அடிப்படையாகக் கொண்டு இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இன்று முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடக்கம்!

மேலும் ராகுல் தலைமையிலான லக்னோ அணி லோகோ நமது தேசியக் கொடியில் உள்ள ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவப்பு நிறத்துடன் நீல நிறத்தில் ஆண்கள் இடம்பெறும் வகையில் கிரிக்கெட் பந்தின் நடுவில் ஒரு மட்டையும் இதில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நிறமும் ஒரு தனித்துவமான அர்த்தத்தை குறிக்கிறது. இந்த ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் IPL தொடங்குவதற்கு முன்பு லக்னோ அணியின் ஜெர்ஸி கூடிய விரைவில் வெளியாகும் என்று அவ்வணியின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!