விவசாய கடன் அட்டை இன்னும் பெறவில்லையா? – உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!

0
விவசாய கடன் அட்டை இன்னும் பெறவில்லையா? - உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!
விவசாய கடன் அட்டை இன்னும் பெறவில்லையா? - உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!
விவசாய கடன் அட்டை இன்னும் பெறவில்லையா? – உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க!

விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

சிறப்பு முகாம்:

மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்யும் வகையில் விவசாய வங்கி கடன் அட்டை என்று திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் கிசான் கிரெடிட் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் விவசாயிகளுக்கான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து புதிதாக விவசாய கடன் அட்டைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கூட்டுறவு சங்கம் ஆணை!!

தற்போது தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவில் கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அறுவடை முடிந்த பிறகு கடன் தொகையை செலுத்திக் கொள்ளும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!