விவசாயிகளுக்கான சூப்பரான திட்டம்..விண்ணப்பிக்க முழு விபரம் உள்ளே – Apply Now!
கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் கிடைக்கும். இத்திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், தகுதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
கிசான் கிரெடிட் கார்டு
நாட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 1998ம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் வழங்கும் வழக்கமான கடன்களின் அதிக வட்டி விகிதங்களில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு கிடைக்கும்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் புதிய மதுக் கொள்கை அமல் – முதல்வர் உரை!
Follow our Instagram for more Latest Updates
அதாவது KCC திட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்களுக்கான வட்டி விகிதம் 2% முதல் 4% மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தைப் பொறுத்து, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து கொள்ளலாம்.
கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், விவசாய உரிமையாளர், பயிரிடுபவர், பங்குதாரர், குத்தகை விவசாயி அல்லது சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட தகுதிகளை பெற்றிருப்பவராக இருக்க வேண்டும். கிசான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலமாக உங்களுக்கு காப்பீட்டுத் கவரேஜ், சேமிப்புக் கணக்கு, ஸ்மார்ட் கார்டு, டெபிட் கார்டுக்கான குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்ட பலன்களும் கிடைக்கிறது