தொடக்கப் பள்ளிகளை விதிகளுக்கு உட்பட்டு திறக்கலாம் – ஐசிஎம்ஆர் வல்லுநர்கள்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில், யுனெஸ்கோவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி ஐசிஎம்ஆர் வல்லுநர்கள் பல்வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தொடக்க பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது.
தொடக்கப் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தற்போது செப்-1 முதல் 9 முதல் 12 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்துள்ளதை அடுத்து தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து பலகட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 500 நாட்களுக்கும் மேலாக தொடக்க பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் சுமார் 32 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் ஏழ்மையில் உள்ள குழந்தைகள், மலைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் என அனைத்து குழந்தைகளும் ஒரு வார்த்தை கூட கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
அக்டோபர் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் – அரசு விளக்கம்!
மேலும் நண்பர்களுக்கு இடையேயான பிணைப்பு இல்லாமல் போனதும் மாணவர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையை தடுக்கும் விதமாக பல்வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளான சானிடைசர் பயன்படுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை மாணவர்களும், ஆசிரியர்களும் பின்பற்றுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஐசிஎம்ஆர் வல்லுநர்களால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கும் முடிவை அறிவிப்பதற்கு முன் தற்போது கொரோனா பாதிப்பினை மாநில ரீதியாக மற்றும் மாவட்ட ரீதியாக ஆய்வு செய்தும், குழந்தைகளைச் சார்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
SBI வங்கியின் டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அமேசானில் 10% தள்ளுபடி!
தற்போது 5 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முகக்கவசம் பரிந்துரைக்கபடவில்லை, இதனால் 6 முதல் 11 வயது வரை உள்ளவர்கள் அவர்களின் திறனை பொறுத்து முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். இவ்வாறாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில், யுனெஸ்கோவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி ஐசிஎம்ஆர் வல்லுநர்கள் பல்வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூடிய விரைவில் தொடக்கப் பள்ளியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.