நவ.15ம் தேதி தொடக்கப் பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
பீகார் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த அங்கன்வாடிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளை நவம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டுமாக திறக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தொற்று குறைந்திருக்க கூடிய சூழலில் பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் அங்கன்வாடிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக நீண்டகாலமாக மூடப்பட்ட இந்த கல்வி நிறுவனங்களை சுமார் 4 மாதங்கள் கழித்து மீண்டுமாக திறக்க பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அனுமதி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பீகார் முதல்வர், ‘கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளன. அதன் கீழ் இன்றைய நிலைமையை ஆய்வு செய்த பிறகு, நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் வரவிருக்கும் பண்டிகை காலங்களின் போது ஊர்வலம் மற்றும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தேவையான உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்.4 முதல் Amazon Great Indian விற்பனை – குவிய இருக்கும் ஆபர்கள்!
இதனுடன் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து பீகார் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து தகுதியுள்ள நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பீகாரில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 8 லிருந்து 1ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.