பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியிடம் வசமாக சிக்கிய கில்லாடி கோபி – அடுத்த திருப்பம் என்ன?

0
பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியிடம் வசமாக சிக்கிய கில்லாடி கோபி - அடுத்த திருப்பம் என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியிடம் வசமாக சிக்கிய கில்லாடி கோபி - அடுத்த திருப்பம் என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியிடம் வசமாக சிக்கிய கில்லாடி கோபி – அடுத்த திருப்பம் என்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இன்றைய எபிசோடில் கிளைமாக்ஸ் ஆனதா? கோபியின் கதை அல்லது கில்லாடி வேலை செய்து தப்பித்தாரா? என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்ற சீரியல்களை விடவும் பாக்கியலட்சுமி சீரியல் அதன் கதை கதைக்களத்தால் பலராலும் அதிகமாக விரும்பி பார்க்கப் பட்டு வருகிறது. அதாவது இல்லத்தரசிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் தற்போது இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றும் கோபியை சுற்றி தான் மொத்த கதையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. கோபி எப்போது சிக்குவார்? சிதைவார்? என ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்க, கோபியோ எப்போதும் போல எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

வெண்பாவிற்கு ஆதரவாக இருக்கும் ஷர்மிளா, விக்ரமின் முடிவு என்ன ? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இன்றைய எபிசோடிலும் இதே கதை தான் நடக்கிறது. அதாவது ராதிகா தான் குழந்தை மயூ பிறந்தநாளுக்காக ஆசிரமத்தில் இருப்பவர்களுடன் கொண்டாட முடிவு எடுத்து மதிய உணவு, கேக் கட்டிங் என கிராண்ட் பிளான் செய்து சாப்பாடு டெலிவரி வழக்கம் போல் பாக்கியாவிடம் செல்கிறது. அதே போல், சாப்பாடு பார்சலை பாக்கியா தான் கொண்டு வரப் போகிறார், அவரை நீங்கள் கட்டாயம் சந்திக்க வேண்டும் என முன்பே ராதிகா கோபியிடம் சொன்னதால் சுதாரித்து விடுகிறார்.

சீரியலை விட்டு திடீரென விலகிய ‘பாரதி கண்ணம்மா’ பரினா – ரசிகர்கள் அதிர்ச்சி! காரணம் என்ன தெரியுமா?

மேலும், இந்த முறை நாம எஸ்கேப் ஆனால் ராதிகாவுக்கு சந்தேகம் வந்து விடும் என நினைத்த கோபி, மாறாக பாக்கியாவை அந்த இடத்திற்கு வராமல் செய்ய முடிவெடுத்து தனது அப்பாவுடன் ஹாஸ்பிடலுக்கு செல்லுமாறு கூறுகிறார். இதனால் பாக்கியா வரமாட்டார் என்ற தைரியத்தில் கோபியும் அசால்ட்டாக இருக்கிறார். அந்த சமயம் சாப்பாடு பார்சலை செல்வி அக்கா கொண்டு வருகிறார். கோபிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. செல்வி அக்கா, கோபியை பார்ப்பதற்கு முன்பே, கோபி அவரை பார்த்து விட்டு, நைசாக ராதிகாவை அழைத்துக் கொண்டு மறைந்து விடுகிறார்.

இவ்வாறு சாப்பாடு கொடுத்துவிட்டு, செல்வி அக்காவும் ஆட்டோவில் கிளம்பினார். ஆகா மொத்தம் வழக்கம் போல் கோபி இன்றும் கில்லாடி வேலை செய்து எஸ்கேப் ஆகிவிடுகிறார். இந்த பக்கம் வீட்டுக்கு சென்ற செல்வி அக்காவிடம், ராதிகா ஆண் நண்பர் குறித்து பாக்கியா விசாரிக்க, அதை கோபியின் அப்பா ராமமூர்த்தியும் கவனிக்கிறார். அதன் மூலம் கோபி ஆவலுடன் தான் இருக்கிறார் என்ற உண்மையை வீட்டில் இருந்துக் கொண்டே ராமமூர்த்தி கண்டுபிடித்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!