தமிழகத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் வருத்தம்!!

0
தமிழகத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் வருத்தம்!!
தமிழகத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் வருத்தம்!!
தமிழகத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் வருத்தம்!!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் நோய் தாக்கத்தினால் இதுவரை பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகியுள்ளது என பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் பாதித்த கல்வி

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்திக்க நேர்ந்தது. பொருளாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இப்படி இருக்க மாணவர்களின் படிப்பு பெருமளவு பாதிக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டின் இறுதியான மார்ச் மாதத்தில் தான் கொரோனா பரவல் வேகமெடுத்தது. அதன்படி மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கல்வியில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஏனென்றால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஏறத்தாழ பாடங்கள் முடிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தது. அதுவே இந்த கல்வியாண்டை எடுத்துக் கொண்டால் மாணவர்களுக்கான பாடங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இல்லாத சூழலில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

காமராஜர் பல்கலை தொழில்நுட்ப துறை மூடல் – கொரோனா எதிரொலி!!

இந்த ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பலனளிக்கிறதா? என்று பார்த்தால் அது இல்லை என்றே கூறலாம். அதிலும் இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யாரென்றால் 5 முதல் 8 வரையுள்ள இடைநிலை கல்வி பயிலும் மாணவர்கள் தான். ஏனென்றால் இந்த வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல் முயற்சிகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 1 ஆம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களின் அடிப்படை கல்வியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் பிரயோஜனமாக இல்லை, பள்ளிகளில் இதுவரை வகுப்புகளும் திறக்கப்படவில்லை என்பது பெற்றோர்களுக்கு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் விடுமுறை நாள் மாற்றம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!!

தவிர கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஆசிரியர்கள் வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கல்வியே தெரியாத நிலையில் அவர்களால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது என்று பெற்றோர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எனவே அந்த மாணவர்களுக்கான கல்வியை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  அடுத்த கல்வியாண்டில் ஆவது எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!