தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG உட்பட மழலையர் பள்ளிகள் மூடல்? பெற்றோர்களின் கோரிக்கை!

0
தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG உட்பட மழலையர் பள்ளிகள் மூடல்? பெற்றோர்களின் கோரிக்கை!
தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG உட்பட மழலையர் பள்ளிகள் மூடல்? பெற்றோர்களின் கோரிக்கை!
தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG உட்பட மழலையர் பள்ளிகள் மூடல்? பெற்றோர்களின் கோரிக்கை!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள மழலையர் வகுப்புகளுக்கு கொரோனா ஊரடங்கு பின் வகுப்புகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. அதனால் மாணவர்கள் சிரமத்தில் இருப்பதால் விரைவில் தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகள் மாணவர்களுக்கான மேம்பாட்டிற்கு பல வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வசதிகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஏழை எளிய மாணவர்களுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த வகுப்புகளுக்கு, பள்ளிகளில் உபரியாக பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்து பணியமர்த்தப்பட்டனர்.

ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம் அமல்!

ஒவ்வொரு ஒன்றியத்தில் ஒரு பள்ளியை தேர்வு செய்து அப்பள்ளியில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அடுத்த ஆண்டுகளில் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் அதன் பின் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. குறிப்பாக தொடக்கநிலை பள்ளிகள் 31 மாதங்கள் செயல்படாமல் இருந்தது. ஆன்லைன் மூலமாக பாடங்களை கவனிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது குறைந்து இருக்கிறது கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் தனியார் பள்ளிகளில் மட்டுமே எல்கேஜி யுகேஜி வகுப்புகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் அந்த வகுப்புகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. இது குறித்து பெற்றோர்கள் அரசு பள்ளிகளுக்கு சென்று கேட்ட போது ஆசிரியர்கள் வரவில்லை என சொன்னதாக தெரிவிக்கின்றனர். அந்த வகுப்பு ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் கல்வித்துறை அதிகாரிகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு செயலி மூலம் போடப்படும் வருகைப்பதிவில் அனைத்து மாணவர்களும் ஆப்சென்ட் என போட சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.

அதன் படி பார்த்தால் இனிமேல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிரந்தரமாக செயல்படாது என தெரிகிறது. அதனால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். தமிழக அரசு இதுவரை அது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் தங்களது குழந்தைகள் கடந்த மூன்று நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என கைபேசிக்கு குறுந்தகவல் வருகிறது. அதனால் பெரும் குழப்பமான சூழ்நிலை இருப்பதாகவும், அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்கி அதற்கான புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!