தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு!

0
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நவம்பரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நவம்பரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு!

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நவம்பர் மாதம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பணியிட மாறுதல்:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,431 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளில் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின் பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே ஒன்றியம் / மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என 3 பிரிவுகளாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் விருப்பமாறுதல் விண்ணப்பித்து தங்களது ஊரிலே பணிபுரியும் வகையில் ட்ரான்ஸ்பர் பெற்றுக்கொள்வர். இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை அறிக்கை!

அதுமட்டுமின்றி பணிக்காலம் அடிப்படையில் பதவி உயர்வும் வழங்கப்படும். அதற்கும் கலந்தாய்வு நடத்தப்படும். இந்த இரண்டு செயல்பாடுகளும் ஒரே கலந்தாய்வின் போது தெரிவு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த கலந்தாய்வு மே மாதம் நடைபெற்று விடும். ஆனால் கடந்த மே 2021 கொரோனா பெருந்தொற்றில் இருந்ததால் இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு ஜூலை மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு மட்டுமே நடைபெற்றது. இதனை எதிர்த்து பலர் வழக்கு தொடர்ந்தனர். அதனால் இரண்டிற்கும் ஒன்றாக கலந்தாய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!

அதனை தொடர்ந்து பழைய பொது கலந்தாய்வு முறை மூலம் பணிமாறுதல் செய்ததனால் வட மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருந்து வருகிறது. அதனால் தற்போது பூஜ்ஜிய கலந்தாய்வு முறை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்முறையாக மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதனை பலர் ஆதரித்து வருகின்றனர். கலந்தாய்வு விதிமுறைகள் ஆசிரியர்களுக்கு உகந்த வகையில் தான் வகுக்கப்பட்டுள்ளன, ஆசிரியர்கள் அஞ்ச வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த கலந்தாய்வானது வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!