மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊழியர்கள் அதிர்ச்சி!
கேரளாவில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன் கிழமைகளில் அலுவலகத்திற்கு கைத்தறி ஆடை அணிந்து வரவேண்டும் என்று மாநில தொழில்துறை மந்திரி அறிவித்துள்ளார்.
கைத்தறி:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்குகாக பணி செய்து வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் முதலில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை தொடர்ந்து அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 2 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்!
அதனை தொடர்ந்து தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி பிப்.26 No Bag தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
கைத்தறி பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிந்து வரவேண்டும் என்று மாநில தொழில்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதுபோல அரசு நிறுவனங்கள் ஏதாவது பொருட்கள் வாங்கும்போது, கைத்தறி தயாரிப்பு பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பள்ளி சீருடைகள் அனைத்தும் கைத்தறி ஆடைகள் மூலமே தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவில் 75 புதிய கைத்தறி ஷோரூம்கள் அமைக்கப்படும் என்றும் தொழில்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.