முழு ஊரடங்கு ரத்து, அக்.4 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கேரளா மாநிலத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்க கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீக்கம்
கொரோனா 2 ஆம் அலை பரவலானது நாடு முழுவதும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா புதிய பாதிப்புகள் உச்சமடைந்து வருகிறது. அதாவது இந்தியாவில் ஒரு நாள் பதிவு செய்யப்பட்டு வரும் மொத்த பாதிப்பில் பாதியளவு கேரளா மாநிலத்தில் கண்டறியப்பட்டு வருகிறது. இது தவிர அம்மாநிலத்தில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி!
இதற்கு மத்தியில் கேரளாவில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகள் தோறும் விதிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில் நிலவும் கொரோனா நிலைமையை மதிப்பிடுவதற்கான ஆய்வுக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. அதற்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இதனிடையே கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,723 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் 189 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
மேலும் கேரளா மாநிலத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்த முதல்வர் பினராயி விஜயன், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன் கீழ், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அனைத்தும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. அதே நேரத்தில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.