12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மாற்றியமைக்க வாய்ப்பில்லை – கல்வித்துறை அறிவிப்பு!!
பொதுத்தேர்வுகள்:
கேரள மாநில கல்வித்துறை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மார்ச் 17ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு பகுதியில் உள்ள பள்ளியை சேர்ந்த 36 மாணவர்கள் ஒன்றாக இணைந்து கல்வி அமைச்சர், கல்வி இயக்குனர் ஜெனரல், கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆகியோருக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வைக்குமாறு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். மாணவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு – என்டிஏ அறிவிப்பு!!
தேர்வு தேதிகள்:
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பெற்றோர் ஒருவர் செய்தியாளர்களிடம், தேர்வுகள் அனைத்தும் மிக நெருக்கமான தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. உயிரியல் தேர்வு மார்ச் 17, ஹிந்தி தேர்வு மார்ச் 18, வேதியியல் தேர்வு மார்ச் 19ம் தேதியும் நடக்க உள்ளது. தேர்வுகள் மார்ச் 29ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. வேதியியல் தேர்வு மட்டும் மார்ச் 31ம் தேதி அன்று மாற்றி வைக்கப்பட்டால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
கல்வித்துறையின் பதில்:
இதற்கு கேரள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வட்டாரங்கள், “தேர்வை திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நடத்துவதே அரசின் முன்னுரிமையாகும். வேறு அவசர காரணங்கள் இருந்தால் மட்டுமே தேர்வு ஒத்திவைக்கப்படும். இல்லையென்றால் தேர்வு ஒத்திவைக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்