இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்றும், நாளையும் (வார இறுதி நாட்கள்) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இரு நாட்கள் முழு ஊரடங்கு:
கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை அடைந்து உயிர் பலியும் அதிகரித்து வந்தது. மாநில அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் நடமாட்டத்தை குறைக்க கடும் கட்டுப்பாடுகள் உடன் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
7வது ஊதியக்குழு – மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சமீபத்திய தகவல்!
தடுப்பூசிகள் செலுத்தும் பணி மாநிலம் முழுவதும் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. தொடர் முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசியின் விளைவாக கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் குறைந்து வருகிறது. மேலும் தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. அதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. காய்கறி, மளிகை கடைகள் குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளும் குறைந்த பயணிகளுடன் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனா குறைந்து வந்தாலும் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு கேரளாவில் வார இறுதி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சேவை தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.