ஜூலை 3, 4ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கேரளாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவானது இன்றும், நாளையும் (ஜூலை 3, 4) அமல்படுத்தப்பட உள்ளது. இவற்றில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
வார இறுதி முடக்கம்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் தினசரி அமலில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கேரளாவில் இன்றும் நாளையும் (ஜூலை 3, 4) அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் தொடக்கம்!
தவிர இவ்விரண்டு நாட்களிலும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படாது. இந்த முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளுக்காக போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தவிர பால், காய்கறிகள், மீன், இறைச்சி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள், மருத்துவக் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
TN Job “FB Group” Join Now
மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும், மருத்துவமனை தேவைகளுக்காக மட்டும் அரசின் பரிந்துரையின் அடிப்படையில் பிற பகுதிகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் வீட்டு விநியோகம் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகள் மற்றும் பார்கள் திறக்கப்படாது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் தினசரி 146 இறப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.