அதிரடியாக உயரும் பெட்ரோல், டீசல் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி! கேரளா அரசு அறிவிப்பு!!
கேரளா மாநிலத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று (பிப். 3) தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலத்தில் பெட்ரோல், டீசல், மதுபானங்களின் விலை உயர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
விலை உயர்வு:
2023-24ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கை கேரளா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கேரளா நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் பல முக்கிய அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் அறிவித்தார். குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுபானங்கள் மீது சமூக பாதுகாப்பு செஸ் வரி (Social Security Cess) விதிக்கப்படும் என அவர் அறிவித்தார்.
மத்திய அரசில் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – அமைச்சர் தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பெட்ரோல், டீசல், மதுபானங்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான சமூக பாதுகாப்பு செஸ் வரியால் அதன் விலையானது ரூ 2 அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் கேரளா அரசிற்கு கூடுதலாக 750 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் மீதான சமூக பாதுகாப்பு செஸ் வரி காரணமாக கேரளா அரசிற்கு கூடுதலாக 400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.