இன்று முதல் பள்ளிகள் திறப்பு – ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடக்கம்!
இன்று (ஜூன் 1 ம் தேதி) கேரளாவில் மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. புதிய கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் மாநில அரசின் கைட் விக்டர்ஸ் சேனல் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
இன்று முதல் கேரளாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும், ஆனால் கொரோனா தொற்றுநோயால் கடந்த ஆண்டு போல ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் மட்டுமே ஜூன் 1 முதல் தொடங்கும். 10 முதல் 12 வகுப்புகள் பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் கைட் விக்டர்ஸ் சேனல் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். ஆன்லைனில் குழந்தைகளுக்கான பள்ளி நுழைவு விழா நடைபெறும்.
தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் விளக்கம்!
ஜூன் 1 ஆம் தேதி, கைட் விக்டர்ஸ் சேனலில் அங்கன்வாடி மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது. 1 முதல் 10 வகுப்புகளுக்கான சோதனை ஒளிபரப்பு ஜூன் 2 முதல் ஜூன் 4 வரை நடைபெறும். பிளஸ் 2 வகுப்புகள் ஜூன் 7 முதல் தொடங்கும். கைட் தலைமை நிர்வாக அதிகாரி அன்வர் சதாத் கூறுகையில், டிஜிட்டல் வகுப்புகள் தவிர, ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தளம் வாயிலாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க உயர் கல்வி அமைச்சர் ஆர் பிந்து கடந்த வாரம் துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்தினார். அதன் முடிவில் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஆஃப்லைனில் நடத்துமாறு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.