ஆன்லைன் டாக்சி சேவை இன்று முதல் தொடக்கம் – “கேரளா சவாரி” செயலி!
நாட்டில் அனைத்து சேவைகளும் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாநிலத்தில் டாக்சி, ஆட்டோவை புக் செய்ய ஒரு செயலி ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது.
கேரளா சவாரி
இந்தியா முழுவதும் அனைத்து பயன்பாடுகளும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வகையான சேவைகளையும் ஆன்லைன் முறையில் பெற முடிகிறது. அந்த வகையில் தற்போது டாக்சி, ஆட்டோவை ஆன்லைன் முறையில் புக்கிங் செய்யலாம். இதற்கான செயலிகளை தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த செயலிகளோடு இணையும் டாக்சிகள், ஆட்டோக்களுக்கு சவாரி கிடைக்கிறது. மேலும் இந்த செயலிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் கொடுக்கப்பட வேண்டும்
ஆனால் சில நேரங்களில் இந்த கமிஷன் சதவீதம் அதிகமாக உள்ளதாக டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணத்தை வசூல் செய்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக தற்போது கேரளா மாநிலத்தில் டாக்சி, ஆட்டோவை புக் செய்ய ஒரு செயலி ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொதுமக்களுக்கும், டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட ஓட்டுனர்களுக்கும் பணச்சுமையை குறைக்கும் வகையில் தானே டாக்சி சேவை செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது மாநிலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ATM Card க்கான பண பரிவர்த்தனை கட்டணம் உயர்வு? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
அதாவது, “கேரளா சவாரி” என்ற டாக்சி, ஆட்டோவை புக் செய்யும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நேரங்களில் டாக்சி, ஆட்டோவை புக் செய்து கொள்ளலாம். இந்த சேவையை இன்று முதல் மாநிலத்தில் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அத்துடன் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட ஓட்டுனர்கள் பெறும் கட்டணத்தில் இருந்து 8% மட்டுமே அரசுக்கு செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கமிஷன் மற்ற தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷனை விட குறைவாகவும் உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்