ரயில் நிலையங்களுக்கு உள்ளே உணவு கடைகள் அமைப்பு – தெற்கு ரயில்வே முடிவு!
கேரளா மாநிலம் கண்ணூரில் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள வளாகத்தில், கேட்டரிங் ஸ்டால்களை விரைவில் அமைக்க இருப்பதாக தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
கேட்டரிங் ஸ்டால்கள்:
பொதுவாக மக்கள் பொதுப்போக்குவரத்து பயன்படுத்த முக்கியமாக ரயில் சேவையை நாடுகின்றனர். இந்நிலையில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ரயில் நிலையங்களில் உள்ள கேன்டீன்களில் தரமான உணவு வழங்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி முன்னதாக ரயில்வேயின் கேட்டரிங் ஸ்டால்கள், ரயில் நிலையத்தின் உள்ளே உள்ள நடைமேடைகளில் மட்டுமே பயணிகளுக்காக இயங்கி வந்தன.
Exams Daily Mobile App Download
ஆனால் தற்போது ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள வளாகத்தில், கேட்டரிங் ஸ்டால்களை விரைவில் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட 17 ஸ்டேஷன்களில் உணவுக்கடைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மங்களூரு சென்ட்ரல், மங்களூரு சந்திப்பு, வலப்பட்டணம், கண்ணூர், எடக்காடு, கல்லை, கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் ரயில் நிலையத்திற்கு வெளியே ஸ்டால்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – கலந்தாய்வு தேதி, தேர்வு பட்டியல் வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் மங்களூரு சென்ட்ரலில் இரண்டு ஸ்டால்களும், பாலக்காடு ரயில் நிலையத்தில் ஆறு ஸ்டால்களும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தினசரி பயணிகளுக்கு மட்டுமல்லாமல் வளப்பட்டணம், எடக்காடு, கல்லாய், மேற்கு மலை, திருநாவாயா போன்ற சரக்கு போக்குவரத்துக்கு பெயர் பெற்ற ரயில் நிலையங்களிலும் கடைகள் அமைக்கப்படுவதால் இங்கு வரும் நூற்றுக்கணக்கான சுமை ஏற்றும் மற்றும் லாரி தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.