ஜூன் 7 முதல் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – ஜூன் 9 வரை முழு ஊரடங்கு!
கேரள மாநிலத்தில் வருகின்ற ஜூன் மாதம் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போது இன்று முதல் முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவதும் அலை வீரியம் எடுத்து மக்களை மிக அதிக அளவில் தாக்கி வந்ததன் காரணமாக கடுமையான ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வந்தது. கடந்த மாதம் திருவனந்தபுரம் உட்பட்ட குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் கொரோனாவின் தீவிரம் அதிகமாக காணப்பட்டதால் அங்கு மிக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது இதன் காரணமாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இன்று முதல் 20 மாவட்டங்களில் கடைகளை திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
இருந்தும் கேரள மாநிலத்தில் வருகின்ற ஜூன் மாதம் 9ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் கட்டுப்பாடுகளுடன் அனைத்து அரசு அலுவலங்கள் இயங்கலாம் என்று அறிவித்துள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் அலுவலங்கள் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழில்துறை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தக்க பாதுகாப்புகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டில் இருந்து பணிபுரியும் சேவை தொடர்ந்து நடைபெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.