கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மாநில அரசு தகவல்!
கொரோனா பரவல் 50 சதவீததிற்கு அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநிலத்தின் முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் நிலையை கொண்டு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்தும் விதிமுறைகளை விதித்தும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை கூறுகிறது.
தற்போது கேரள அரசு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது கேரளாவில் புதிதாக 37,119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 49 பேர் இறந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. எனவே 50 சதவீதத்திற்கு மேல் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
தமிழக தேர்தல் முடிவுகள் 2021 – நள்ளிரவு 12 மணிக்குள் வெளியீடு!!
மேலும் அம்மாவட்டத்தில் மே 4 முதல் மே 9 வரை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தேவையான பொருட்களை தொலைப்பேசி மூலமாகவும் வாட்ஸ் ஆப் மூலம் ஆர்டர் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இதனால் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க முடியும். மேலும் பரவி வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் அம்மாநில முதல் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்