பள்ளி மாணவர்களை தாக்கும் கொடிய வைரஸ் – 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! கேரளா அரசு அறிவிப்பு!!
கேரளா மாநிலத்தில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் தோற்று பள்ளியில் கிணற்று நீர் மூலம் பரவி இருக்கலாம் என்பதால் அது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நோரோ வைரஸ்:
கேரளாவில் கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் காரணமாக ஏகப்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் இரைப்பையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்நிலையில் வயநாட்டில் உள்ள லகிடி ஜவஹர் நவோதயா பள்ளியில் மாணவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனர். அதில் இவர்களுக்கு இந்த நோய் தோற்று தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது.
மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான தனி வார்டு – அமைச்சர் துவக்கி வைப்பு!!
Follow our Instagram for more Latest Updates
அந்த பள்ளியில் 98 மாணவ மாணவிகளுக்கு இந்த நோய் இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் அந்த பள்ளிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும் நோரோ வைரஸ் உணவு மற்றும் தண்ணீர் வழியாக பரவக்கூடியது என்பதால் அந்த பள்ளி குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக அதிகாரிகள் கணித்துள்ளனர். மேலும் பள்ளியின் கிணறுகளில் குளோரிநேஷன் செய்ய அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தூய்மையாக இருக்க வேண்டும் எனவும், தண்ணீரை சூடு செய்து குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.