அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்? கேரள அரசு அதிரடி!
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏற்பட்ட நட்டத்தை தொழிலாளர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய கேரளா போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து கழகம்:
தமிழகத்தில் தற்போது போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக நிலுவை தொகை வழங்கப்படவில்லை என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் அதிகம் ஏற்பட்டுள்ளதால் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துறையில் லாபத்தினை அதிகரிக்க அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் கேரள மாநில சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கண்டித்து கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர்.
Wipro, Infosys, TCS நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு குறித்த விவரம் வெளியீடு!
இந்த போராட்டத்தால் அன்றைய தினம் 3 பணிமனைகளில் 49 டிரைவர்கள் மற்றும் 69 கண்டக்டர்கள் பணிக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதனால் அந்த பணிமனைக்கு ரூ.9 லட்சத்து 49 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் விதமாக அரசு அந்த தொகையை ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஊழியர்களிடம் இருந்து 5 சம தவணைகளில் பணத்தை பிடித்தம் செய்ய மாநில போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஊழியரின் கணக்கில் இருந்து 5 தவணைகளாக ரூ.40 ஆயிரத்து 277 வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்