அரசு ஊழியர்களுக்கு வெளியாக இருக்கும் ஹேப்பி நியூஸ் – கேரளா அரசின் சூப்பர் திட்டம்!!
கேரளா மாநிலத்தில் வருகிற 10ம் தேதி அன்று தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்கள் முன்னிலையில் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து பரிசீலினை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது.
விடுமுறை:
கேரளா மாநிலத்தில் வருகிற ஜனவரி 10ம் தேதி அன்று தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்கள் முன்னிலையில் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இதில் அரசு துறை சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து பரிசீலினை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதில் குறிப்பாக ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க பரிசீலினை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் இந்த வருடத்தில் ஏராளமான அரசு விடுமுறை நாட்களை அரசு ஊழியர்கள் பெறுவார்கள்.
LPG சமையல் எரிவாயு விலை கிடு கிடு உயர்வு – குடும்பத்தரசிகள் அதிர்ச்சி!
மேலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் சார்பதிவாளர் நியமனம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதன் மூலமாக அரசு துறைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் வேலையில்லா இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.